தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நடந்து முடிந்த 9-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அப்பாறை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் வெற்றி பெற்றிருக்காத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment