இலங்கையின் மூத்த குடிமக்கள் தமிழர்களே என்று தெரிவித்தமை தொடர்பில் வடமாகாண சபையின் முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் புலனாய்வுத்துறை விசாரணை இடம் பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கைப் புலனாய்வுப் துறைக் குழுவொன்று, நல்லூரில் உள்ள விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் வைத்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் பௌத்த துறவி ஒருவர் மேற்கொண்ட காவற்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று விசாரணை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளின் தமிழ் மொழியும் ஒன்றாகும். அத்துடன் இலங்கையின் முதல் பூர்வீக குடிமக்களின் மொழி தமிழ் மொழி என்றும் சுட்டிக்காட்டியிருந்த விக்னேஸ்வரன், அந்த மொழியில் எனது முதல் நாடாளுமன்ற உரையயை ஆரம்பிக்கிறேன் என்று, கடந்த ஓகஸ்ட் 20ம் நாள் இலங்கை நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment