ஒன்ராறியோவில் அதிகூடிய நாளார்ந்த கோவிட்-19 நுண்மித் தொற்றாக இன்று 978 புதிய தொற்றுக்களும், ஒன்பது இழப்புக்களும் பதிவாகியுள்ளது.
மாகாண ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 44,151 பரிசோதனைகளில் இருந்து இந்த புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த ஒக்ரோபர் 09ம் நாள் பதிவான 939 பெருந்தொற்றுக்களுக்கு மேலாக இன்றைய எண்ணிக்கை காணப்படுகிறது.
இன்றைய தொற்றுக்களில் 348 ரொறன்ரோவிலும், 170 பீல்ப் பிராந்தியத்திலும், 141 யோர்க்கிலும், 89 ஒடாவாவிலும், 51 டுர்றம் பிராந்தியத்திலும் உள்ளடங்குகின்றன.
இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,331 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85.7 சதவீதமான 59,424 பேர் குணமடைந்துள்ளதுடன், 3086 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Comments
Post a Comment