1939 செப்ரெம்பர் 01ம் நாள் தொடக்கம் 1945 செப்ரெம்பர் 02ம் நாள் வரையான ஆறு ஆண்டுகாலமானது இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியாக கருதப்படுகிறது.
இக்காலப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருள் அல்லது கருவி ஒன்று நேற்றிரவு ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள எட்டோபிக்கோவின்(Etobicoke) Dunning Cresent & Westhead Road பகுதியில் உள்ள வீட்டு வளாகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
காவற்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அயலில் உள்ள ஆறு வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த ரொறன்ரோ காவற்துறையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மேற்கொண்ட நடவடிக்கையில் அது செயற்திறன் அற்றதென உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக அக்கற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.


Comments
Post a Comment