Skip to main content

இரண்டாம் உலகமகாயுத்த கால வெடிகருவி எட்டோபிக்கோவில் மீட்பு!

 

1939 செப்ரெம்பர் 01ம் நாள்  தொடக்கம் 1945 செப்ரெம்பர் 02ம் நாள் வரையான ஆறு ஆண்டுகாலமானது இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியாக கருதப்படுகிறது.

இக்காலப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருள் அல்லது கருவி ஒன்று நேற்றிரவு ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள எட்டோபிக்கோவின்(Etobicoke) Dunning Cresent & Westhead Road பகுதியில் உள்ள வீட்டு வளாகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

காவற்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அயலில் உள்ள ஆறு வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.


நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த ரொறன்ரோ காவற்துறையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மேற்கொண்ட நடவடிக்கையில் அது செயற்திறன் அற்றதென உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக அக்கற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.



Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.