Skip to main content

1600 புதிய தொற்றுக்களை எட்டியது ஒன்ராறியோ!

 


ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 46,671 கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுப் பரிசோதனைகளில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக 1588 நாளார்ந்த தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 21 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

கடந்த மார்ச் முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா  தொற்றுக்குறித்த பரிசோதனைகளில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்றுக்களாக இது காணப்படுகின்றது.

பீல்ப் பிராந்தியத்தில் 522 பேரும், ரொறன்ரோவில் 450 பேரும், 150 யோர்க் பிராந்தியத்தில் பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றுக்களுள் உள்ளடங்குகின்றனர்.

பிந்திய நாளார்ந்த தொற்றுக்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,378 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 86,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 3472 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம் முதல் ரொறன்ரோ, பீல்ப் பிராந்தியங்கள் முடக்க நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது.

ரொறன்ரோ நகரின் கொரோனா நிலைமைகள் பிழையான திசையில் நகர்வதாக தாம் கருதுவதாகவும் நோய்ப் பரம்பலை கட்டுப்படுத்த சில கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் நகர முதல்வர் ஜோன் ரோறி சுட்டிக்காட்டியுள்ளார்.

நகரில் கடுமையான சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நோய்வாய்ப்படுவது பொருளாதார பாதிப்புக்களை விடவும் ஆபத்தானது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென ஜோன் ரோறி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரொறன்ரோ மற்றும் பீல் பிரதேசங்களில் உடல் பயிற்சி மையங்கள் உட்பட அத்தியாவசியமற்ற வணிக வளாகங்கள் அனைத்தையும்; மூட உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களுக்கு உள்ளேயும் வெளியமர்வுகளிலும் உணவு பரிமாறுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் உணவுப் பொதிகள் விற்பனையாவது தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.