ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுக் குறித்த 25,279 பரிசோதனைகளில் அதிகப்படியான 1050 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் முதலாக ஒன்ராறியோவில் அடையாளம் காணப்பட்ட நாளார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த ஒக்ரோபர் 25ம் நாள் அடையாளம் காணப்பட்ட 1042 தொற்றாளர்களுக்கு மேலாக இன்று 1050 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை சுமார் ஐம்பதினாயிரம் வரையான பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடிய திறன் மாகாண ஆய்வுகூடங்களில் காணப்படுகின்ற போதும், 25,279 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிந்திய நாளார்ந்த கொரோனா தொற்றாளர்களில் 408 ரொறன்ரோவிலும், பீல்ப் பிராந்தியத்தில் 212 உம், ஹோல்ட்டனில் 86 உம், யோர்க்கில் 76 உம், டர்ரம் பிராந்தியத்தில் 57 உம் உள்ளடங்குகின்றன.
இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,705 ஆக உயர்வடைந்தது. இவர்களில் இன்று குணமடைந்த 837 பேருடன் இதுவரை 85.4 சதவீதமான 67,244 பேர் குணமடைந்துள்ளனர்.


Comments
Post a Comment