ஈரானில் வன்முறையைத் தூண்டியதாக அந்நாட்டு உயர் நீதிமன்றால் குற்றம் சுமத்தப்பட்ட ஊடகவியலாளர் Ruhollah Zam தூக்கிலிடப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டது.
2017ல் ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பெரும் எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் செயற்பட்டவர் என்று Zam மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் வசித்து வந்தார்.
Amad News என்ற இணையத் தளத்தை நடத்திவந்த அவர், கடந்த 2019ல் ஈராக்குக்கு பயணம் ஒன்றை மேற்கொண்ட நிலையில், அங்கு கைதாகி ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
நேற்றைய தினம் ஈரான் உயர் நீதிமன்றம் Zam-க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனைத் தீர்ப்பை அறிவித்ததை அடுத்து இன்று மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்தது.
ஊடகவியலாளர் Zam-க்கு மரண தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசு உடனடியான தமது கண்டணத்தை பதிவு செய்துள்ளன.


Comments
Post a Comment