கல்முனை மாநகர சபை முதல்வர் மூத்த சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்று அதிகமாக காணப்படும் சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையிலும், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை,கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை முழுமையாக மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொதுமக்களை வீடுகளிலே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கல்முனை மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் அர்சாத் காரியப்பர், கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம் தர்மசேன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறே நேற்றைய கூட்டத்தில் கல்முனை செலான் வீதியிலிருந்து சின்னத்தம்பி வீதி வரை உள்ள பாதைகள் மற்றும் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில கல்முனை செலான் வீதி,கடற்கரைப்பள்ளி வீதி, மாதவன் வீதி, சின்னத்தம்பி வீதி ஆகிய 4 வீதிகளும், அதில் உள்ள சகல உள்வீதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


Comments
Post a Comment